24 66c9dee288d74
இலங்கை

கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்தார் தமிழ் பொது வேட்பாளர்

Share

கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்தார் தமிழ் பொது வேட்பாளர்

யாழ் மாவட்டக் கூட்டுறவு அமைப்புகளின் உயர்மட்டப் பிரதிநிதிகளுக்கும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனிற்கும் (P. Arianetheran) இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது இன்று (24) நல்லூர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் சார்பில் பொதுவேட்பாளராகக் களமிறங்கியுள்ள பா. அரியநேத்திரன் பல்வேறு பொது அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து வருகிறார்.

இதன் ஒரு கட்டமாக யாழ் மாவட்டக் கூட்டுறவு அமைப்புகளின் உயர்மட்டப் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஜங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் சமூக அரசியற் செயற்பாட்டாளர் க. அருந்தவபாலன் (K. Arundhavapalan) தமிழ் மக்கள் பொதுச் சபையைச் சார்ந்த நிலாந்தன் (Nilanthan) ஆகியோரும் கலந்துகொண்டு தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 33
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் கையிருப்பு சொத்துக்கள் மார்ச் மாதத்தில் வீழ்ச்சி: மத்திய வங்கி வெளியிட்ட புதிய அறிக்கை!

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு 2026 மார்ச் மாத இறுதியில் 3.5 சதவீதம் வரை...

world 32
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கில் அமைதி நிலவ வேண்டும்: ஜனாதிபதி அநுரகுமார வலியுறுத்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் தணிந்து விரைவில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே...

world 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆற்றில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு: அடையாளம் காண்பதில் சிக்கல்!

நோர்வூட் பகுதியில் பாயும் கெசல்கமுவ ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் இன்று (ஏப்ரல்...

world 30
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நீர்மட்டம் குறைவு: நாளை மேலும் பல பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு!

லபுகம மற்றும் கலட்டுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக, மேல்...