28 14
இலங்கைசெய்திகள்

திடீரென காணாமல்போன 51 கோடி ரூபா பெறுமதியான நீர் மானிகள்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Share

திடீரென காணாமல்போன 51 கோடி ரூபா பெறுமதியான நீர் மானிகள்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு சொந்தமான 51 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நீர் மானிகள் காணாமல்போனமை தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று (22) நீதிமன்றத்திற்கு இதனை அறிவித்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இது தொடர்பில் அறிக்கை செய்ததோடு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் சிசிர குமார ஜயவீரவின் முறைப்பாட்டின் பிரகாரம் இது தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு சொந்தமான (513,644,500) பெறுமதியான நீர் மானிகள் காணாமல்போயுள்ளமை தொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிக்கை அளிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...