1 35 scaled
இலங்கை

மன்னாரில் உயிரிழந்த இளம் குடும்பபெண் விவகாரம்: வைத்தியர் ஒருவரை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை

Share

மன்னாரில் உயிரிழந்த இளம் குடும்பபெண் விவகாரம்: வைத்தியர் ஒருவரை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை

மன்னார் (Mannar) மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இளம் குடும்பபெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவரை பணியிடை நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கடிதம் மத்திய சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் குழந்தையைப் பிரசவித்த 27 வயதான மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரி பெண், அதிக குருதி போக்கு காரணமாக கடந்த மாதம் 28ஆம் திகதி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.

எவ்வாறாயினும் அந்தச் சந்தர்ப்பத்தில் அங்கிருந்த வைத்தியர்கள் அவருக்குரிய முறையில் சிகிச்சை அளிக்கவில்லை என்றும் வைத்தியர்களின் அசமந்த போக்கு காரணமாக அவர் உயிரிழந்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய ஏற்கனவே நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு தாதியர்களுக்கும் இரண்டு குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்களுக்குமே இவ்வாறு பணியிடை நீக்கம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவருக்கும் பணியிடை நீக்கம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

எனினும் இதுவரையில் குறித்த கடிதம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையைச் சென்றடையவில்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் மரியராஜ் சிந்துஜாவின் மரணம் தொடர்பில் நேற்றைய தினமும் (20) மத்திய சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்திய ஓட்டுநர் கைது: சாரதி அனுமதிப்பத்திரமும் இல்லை!

சமூக ஊடகங்களில் வைரலாகிய காணொளி காட்சிகளின் அடிப்படையில், வீதி சமிக்ஞைகள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி...

Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு படுகொலை: கொலையாளிகளுக்கு கடும் தண்டனை கோரி பாரிய மக்கள் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற அதிர்ச்சியை ஏற்படுத்திய கொள்ளை மற்றும் கொடூரக் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய...

Untitled 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் புதிய மைல்கல்: இந்த ஆண்டில் 7 இலட்சம் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்குள்ளேயே 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் என்ற...