27 12
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலின் இறுதியில் ரணில் கடலில் குதிப்பார்! பகிரங்கமாக சாடும் விஜயதாச ராஜபக்ச

Share

ஜனாதிபதி தேர்தலின் இறுதியில் ரணில் கடலில் குதிப்பார்! பகிரங்கமாக சாடும் விஜயதாச ராஜபக்ச

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் பயணத்தின் இறுதி பயணமாகும் என தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள அவரது தேர்தல் காரியாலயத்தில் நேற்று (20) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,”கட்சியை பாதுகாத்துக்கொள்ள முடியாமல் போன அவர் எவ்வாறு நாட்டை பாதுகாக்கப்போகிறார் என கேட்கிறோம்.

என்னை பொறுத்தவரை நான் ரணில் விக்ரமசிங்கவை மதிக்கிறேன்.

ஏனெனில் இந்த தேர்தலுடன் முடிவடையப்போகும் அவரது அரசியல் பயணத்தில், அவர் தனிமையாக சென்று கடலில் குதிக்காமல், தன்னுடன் இருக்கும் திருடர்கள், மோசடிகாரர்களையும் இணைத்துக்கொண்டு கடலில் குதித்தால், நாட்டுக்கு செய்யும் உதவி என நான் அவருக்கு நன்றி செலுத்துகிறேன்.

தேர்தலில் போட்டியிடுவதற்கு இன்று ரணில் விக்ரமசிங்கவுக்கு கட்சி ஒன்று இல்லை. வேறு ஒரு குழுவுக்குரிய தேர்தல் சின்னமான எரிவாயு சிலிண்டரை எடுத்துக்கொண்டே போட்டியிடுவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது.இது மிகவும் கவலைக்குரிய நிலையாகும்.

ரணில் விக்ரமசிங்கவின் 30 வருடகால தலைமைத்துவத்தின் கீழ் 106 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்த ஐக்கிய தேசிய கட்சி 2020 பொதுத் தேர்தலுடன் காணாமல் போகும் என நான் 2018ல் தெரிவித்திருந்தேன்.

அவரின் தலைமையில் அவருக்கு கட்சியை பாதுகாத்துக்கொள்ள முடியாமல் போயிருக்கிறது. கட்சியை பாதுகாத்துக்கொள்ள முடியாமல் போன அவர் எவ்வாறு நாட்டை பாதுகாக்கப்போகிறார்.” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...

18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...

17 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புதிய பேருந்து கட்டண அதிகரிப்பு: நாளை முதல் வழக்கம் போல் பேருந்து சேவைகள்!

இலங்கையில் இன்று (மார்ச் 23, 2026) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்களை...

16 19
செய்திகள்உலகம்

கச்சா எண்ணெய் விலை அதிரடி வீழ்ச்சி: 100 டொலருக்கும் கீழ் சரிந்த பிரெண்ட் கச்சா எண்ணெய்!

ஈரான் மீதான திட்டமிடப்பட்ட இராணுவத் தாக்குதல்களை அமெரிக்கா அடுத்த 5 நாட்களுக்குத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக ஜனாதிபதி...