1 33 scaled
இலங்கை

செப்டம்பர் 22இல் ஆட்சிப்பீடம் ஏறுவோம்: நம்பிக்கை வெளியிட்டுள்ள அநுர

Share

செப்டம்பர் 22இல் ஆட்சிப்பீடம் ஏறுவோம்: நம்பிக்கை வெளியிட்டுள்ள அநுர

எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மக்களின் ஆணை தேசிய மக்கள் சக்தி கட்சிக்குக் கிடைத்து மறுநாள் நாம் ஆட்சிப்பீடம் ஏறுவோம் என ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கிரிபத்கொடையில் நடைபெற்ற கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“அரசின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்துடனேயே தேசிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றும்.

ஊழல், மோசடியை ஒழிக்கும். வரி செலுத்தாமல் உள்ள பலரிடமிருந்து 169 பில்லியனைப் பெற முடியும்.

அவர்களை அடையாளம் கண்டுள்ளோம். அதற்கான நடவடிக்கைளை முன்னெடுப்போம்.” என குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, கட்சி தாவும் தவளை அரசியலுக்குத் தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் முடிவு கட்டப்படும்.

இந்தப் பக்கம், அந்தப் பக்கம் எனக் கட்சி தாவல்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இப்படியான தவளை அரசியலை நாட்டு மக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.

எனவே, தவளை அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும். எமது நாட்டுக்குக் கொள்கை அடிப்படையிலான அரசியலே தேவைப்படுகின்றது. அந்த வழியிலேயே எமது அணி பயணிக்கின்றது.

தாவும் அரசியல் தவளைகளுக்கு எமது அணியில் இடமில்லை. இவ்வாறு தாவும் தவளைகள் இணைந்து கூட்டணிகள் அமைத்திருந்தாலும் அவை எமக்குச் சவாலாக அமையாது. கட்சி தாவினால் நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்துச் செய்வதற்குரிய சட்டம் இயற்றப்படும்.

தற்போது அந்தச் சட்டம் இருந்தாலும் அதனைப் பலப்படுத்தும் வகையில் திருத்தம் கொண்டுவரப்படும். அசிங்கமான அரசியல் கலாசாரத்துக்கு முடிவு கட்டப்படும்”எனவும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....