Sexual Abuse
செய்திகள்இந்தியா

இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை-இந்தியாவில் தொடரும் கொடூரம்

Share

இந்தியாவில் ஓடும் புகையிரதத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

லக்னோ பகுதியிலிருந்து இருந்து மும்பை சென்ற எக்ஸ்பிரஸ் புகையிரதத்தில் கொள்ளையர்களால் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ள நிலையில் 8பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவது..

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் லக்னோபகுதியிலிருந்து இருந்து மராட்டியத்தின் மும்பை நோக்கி கடந்த 8-ம் தேதி இரவு லக்னோ-மும்பை புஷ்பக் எக்ஸ்பிரஸ் புகையிரதம் புறப்பட்டது.

மராட்டியத்தின் லகட்புரி நகரில் உள்ள நிலையத்திற்கு புகையிரதம் வந்தபோது அதில் ஆயுதங்களுடன் 8 கொள்ளையர்கள் ஏறினர்.

படுக்கை பெட்டியில் ஏறிய கொள்ளையர்கள் பயணிகளிடம் ஆயுதங்களை காட்டி மிரட்டி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தனர்.

மேலும் கொள்ளையர்கள் 20 வயது நிரம்பிய பெண் பயணி ஒருவரை அவரது கணவர் மற்றும் சக பயணிகள் முன் ஒடும் புகையிரத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

இதை தடுக்க முயன்ற பெண்ணின் கணவர் மற்றும் சக பயணிகளை கொள்ளையர்கள் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியுள்ளறார்கள்

புகையிரதம் மும்பையின் கசரா ரெயில் நிலையம் வந்ததும் பயணிகள் கூச்சலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அங்கு கடமையில் இருந்த பொலிஸார் கொள்ளையர்களில் 4 பேரை கைது செய்தனர்.

மற்றய 4 கொள்ளையர்கள் தப்பிச்சென்றனர்.

இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்தபொலிஸார் தப்பியோடிய கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில் எஞ்சிய 4 கொள்ளையர்களையும் பொலிஸார் கைது செய்தார்கள்.

கைது செய்யப்பட்டுள்ள 8 பேரில் 4 பேர் மேலும் ப குற்றங்களோடு தொடர்புடையவர்களென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 8 பேரும் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும் அனைவரும் 18 முதல் 25 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் என தெரியவந்துள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கெதிரான பல கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x800 41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அமைச்சரவையின் புதிய முடிவு: வீடற்ற துறவிகளின் பெற்றோர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி உதவி.

பௌத்த சாசனத்தின் நிலைத்தன்மைக்காகத் தங்களது பிள்ளைகளைத் துறவற வாழ்விற்கு அர்ப்பணித்த, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பெற்றோர்களைக்...

image 1200x800 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை: இலங்கையின் எந்தெந்தப் பகுதிகளில் மழை பெய்யும்?

இலங்கையின் தென்கிழக்கே, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடித்து வருவதால்,...

image 1200x800 32
செய்திகள்அரசியல்இலங்கை

சமன் ஏக்கநாயக்கவின் பிணை மனு: இன்று தீர்ப்பு! – ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயண நிதி விவகாரத்தில் அதிரடி!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏக்கநாயக்க, இன்று (18) மீண்டும் கொழும்பு...

image 1200x800 30 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிறப்புச் சான்றிதழுக்கு ரூ. 1,000 இலஞ்சம்: ஆலையடிவேம்பு உதவிப்பதிவாளர் கையும் மெய்யுமாகக் கைது!

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளராகப் பணியாற்றும் உதவிப்பதிவாளர் ஒருவர், பிறப்புச் சான்றிதழை...