18 13
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதிக்கு குவியும் மக்களின் வாழ்த்து!

Share

ஜனாதிபதிக்கு குவியும் மக்களின் வாழ்த்து!

தலதா மாளிகைக்கு ஆசி பெற சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, அங்கு வருகை தந்திருந்த மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவை நேற்று(15) கையளித்த ரணில் விக்ரமசிங்க, வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகைக்கு சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசி பெற்றுள்ளார்.

இதன்போது தலதா மாளிகைக்கு வருகை தந்திருந்த மக்களிடம் நலன் விசாரித்த ஜனாதிபதி அவர்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடியுள்ளார்.

இதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்து, மல்வத்து பீடத்தின் மகாநாயக்க வண. ஸ்ரீ சுமங்கல தேரரின் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொண்ட பின்னர் தேரருடன் சிறு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் அஸ்கிரி மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க வண. வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரின் ஆசி பெற்றதுடன் அஸ்கிரி பீடத்தின் மகா சங்கத்தினர், ஜனாதிபதிக்கு பிரித் பாராயணம் செய்து ஆசி வழங்கியுள்ளனர்.

மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ.கமகே, இராஜாங்க அமைச்சர்களான திலும் அமுனுகம, லொஹான் ரத்வத்தே, அனுராத ஜயரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர்களான மகிந்தானந்த அலுத்கமகே, குணதிலக்க ராஜபக்ச, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க உள்ளிட்ட பலர் இந்த சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...