18 13
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதிக்கு குவியும் மக்களின் வாழ்த்து!

Share

ஜனாதிபதிக்கு குவியும் மக்களின் வாழ்த்து!

தலதா மாளிகைக்கு ஆசி பெற சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, அங்கு வருகை தந்திருந்த மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவை நேற்று(15) கையளித்த ரணில் விக்ரமசிங்க, வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகைக்கு சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசி பெற்றுள்ளார்.

இதன்போது தலதா மாளிகைக்கு வருகை தந்திருந்த மக்களிடம் நலன் விசாரித்த ஜனாதிபதி அவர்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடியுள்ளார்.

இதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்து, மல்வத்து பீடத்தின் மகாநாயக்க வண. ஸ்ரீ சுமங்கல தேரரின் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொண்ட பின்னர் தேரருடன் சிறு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் அஸ்கிரி மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க வண. வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரின் ஆசி பெற்றதுடன் அஸ்கிரி பீடத்தின் மகா சங்கத்தினர், ஜனாதிபதிக்கு பிரித் பாராயணம் செய்து ஆசி வழங்கியுள்ளனர்.

மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ.கமகே, இராஜாங்க அமைச்சர்களான திலும் அமுனுகம, லொஹான் ரத்வத்தே, அனுராத ஜயரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர்களான மகிந்தானந்த அலுத்கமகே, குணதிலக்க ராஜபக்ச, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க உள்ளிட்ட பலர் இந்த சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....