56
இலங்கைசெய்திகள்

ஏர்பூட்டி வயல் உழுத சுமந்திரன் எம்.பி.

Share

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஏர்பூட்டி வயல் உழுது விவசாயம் செய்யும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

கிளிநொச்சி கண்டாவளையில் உள்ள தனது பூர்வீக வயலில் ஏர் பூட்டி வயல் உழுது விதை விதைத்துள்ளார்.

விவசாயிகளின் உரப் பிரச்சினை மற்றும் இரசாயன உரம், விவசாய இரசாயனப்பொருள் பற்றாக்குறை போன்றவற்றால் நாடு முழுவதும் விவசாயிகள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்.

பெரும்போக விதைப்பு தொடங்கி உள்ள நிலையில் விவசாயிகளின் உரப் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு கிட்டவில்லை.

இதனை அரசுக்கு வெளிச்சமிட்டு காட்டும் வகையில் சம்பிரதாயபூர்வமாக எம்.ஏ.சுமந்திரன் விவசாயிகள் சார்பில் குரலெழுப்பியுள்ளார்.

இந்தப் பிரச்சினை குறித்து விவசாயிகள் சார்பில் சுமந்திரன் தொடர்ந்தும் குரல் எழுப்புவார் என அவரது முகநூல் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு பதிவிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

aaaa

555

su

244799122 160922159568328 5765163401450899710 n

244329109 3079961755660644 6313109018040435687 n

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 28
உலகம்செய்திகள்

ஒரு இரவில் 37,000 குடியுரிமை பறிப்பு – வளைகுடா நாடொன்றின் அதிர்ச்சி

குவைத்தில் ஒரு இரவில் 37,000 பேர் தங்கள் குடியுரிமையை இழந்துள்ளனர். குவைத் அரசு 37,000-க்கும் மேற்பட்ட...

14 30
உலகம்செய்திகள்

கனடாவில் முதல் முறையாக AI அமைச்சர் நியமனம் – டிஜிட்டல் வளர்ச்சிக்கான புதிய முன்னெடுப்பு

கனடாவின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சராக எவன் சாலமன் (Evan Solomon) நியமிக்கப்பட்டுள்ளார். 2025 மே...

13 28
இலங்கைசெய்திகள்

பிரித்தானியாவை விட்டு வெளியேறிய இந்திய வம்சாவளி பில்லியனர்

பிரித்தானியாவில் வரிவிதிப்புகள் கடுமையானதால், தொழிலதிபர் ஷ்ரவின் மிட்டல் ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியேறியுள்ளார். பிரித்தானிய அரசின்...

12 28
உலகம்செய்திகள்

அமெரிக்க அச்சுறுத்தல் அறிக்கை… பாகிஸ்தானில் பயங்கர ஆயுதங்கள்: சீனாவிற்கு தொடர்பு

அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையில் பாகிஸ்தான்...