2 17 scaled
உலகம்

உக்ரைன் அத்துமீறலுக்கு பின்னால் அந்த நாடு தான்: கோபத்தில் கொந்தளித்த ரஷ்ய அரசியல்வாதி

Share

உக்ரைன் அத்துமீறலுக்கு பின்னால் அந்த நாடு தான்: கோபத்தில் கொந்தளித்த ரஷ்ய அரசியல்வாதி

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அவசர நிலை பிரகடனம் செய்யும் அளவுக்கு உக்ரைன் ராணுவம் ரஷ்யாவுக்குள் புகுந்து அதிரடி தாக்குதலை முன்னெடுத்துள்ளது.

இதுவே ரஷ்ய அரசியல்வாதி ஒருவரை கொந்தளிக்க வைத்துள்ளதுடன், உக்ரைனின் திடீர் பாய்ச்சலுக்கு காரணம் பிரித்தானியா எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ரஷ்யாவின் Kursk பிராந்தியத்திலேயே உக்ரைன் ராணுவம் டாங்கிகளுடன் புகுந்து துவம்சம் செய்துள்ளது. தற்போது ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் அங்கே முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உக்ரைன் தரப்பால் திடீரென்று முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் நிலைகுலைந்த ரஷ்ய அதிகாரிகள் உடனடியாக அவசர நிலை பிரகடனம் செய்துள்ளதுடன், அங்குள்ள பொதுமக்களையும் வெளியேற்றும் நடவடிக்கையை துரிதப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையிலேயே மூத்த அரசியல்வாதியும் விளாடிமிர் புடினுக்கு நெருக்கமானவருமான Adalbi Shkhagoshev உக்ரைனின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளதுடன், இதுபோன்ற நடவடிக்கைகளின் பின்னால் கட்டாயம் பிரித்தானியாவின் பங்கிருக்கும் என கொந்தளித்துள்ளார்.

உக்ரைனின் இந்த நடவடிக்கை ரஷ்யாவை தூண்டிவிடும் செயல் என்றே ஜனாதிபதி புடின் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் தொடர்பில் ரஷ்ய தளபதி Valery Gerasimov விளக்கமளிக்க கட்டாயப்படுத்தப்பட்டதுடன், ரஷ்ய பிராந்தியத்தின் ஒருபகுதியை இழக்க நேர்ந்ததற்கு பொறுப்பேற்கவும் வைத்துள்ளனர்.

இதனிடையே, உக்ரைன் ராணுவம் முன்னேறுவதை உணர்ந்த விளாடிமிர் புடின், Kursk பிராந்தியத்தில் அமைந்துள்ள அணு உலையை பாதுகாக்க வாக்னர் படையை அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளியான தரவுகளின் அடிப்படையில் Kursk பிராந்தியத்தில் உக்ரைன் ராணுவம் சுமார் 20 மைல்கள் தொலைவில் முன்னேறியுள்ளது என்றே கூறப்படுகிறது. Lgov நகரை எட்ட வெறும் 8 மைல்கள் எஞ்சியுள்ளது.

இப்பகுதி Kursk அணுமின் நிலையத்தில் இருந்து 17 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
உமா குமரன்
உலகம்

பிரித்தானிய அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் ஈழத்தமிழ்ப் பெண்

இலங்கைத் தமிழரான உமா குமரன், பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த...

us troops
உலகம்உலகம்

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி.

ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்...

kuwait airport
உலகம்

ஈரானின் தாக்குதல்களால் நிறுத்தப்பட்டது குவைத் விமான நிலையத்தின் சேவைகள்.

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் ஆகிய நடவடிக்கைகள், மத்திய கிழக்கில்...

VIETNAM BOAT
உலகம்

இரண்டு படகுகள் கவிழ்ந்ததா – 500 இற்கும் மேற்பட்டவர்கள் நிலை என்ன?

மியன்மார் கடற்கரையை அண்மித்த கடற்பகுதியில் 500க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்திருக்கலாம்...