7 7
இலங்கைசெய்திகள்

இலங்கையில்15,000 பேருக்கு வேலை கிடைப்பதில் சிக்கல்: வெளியான காரணம்

Share

இலங்கையில்15,000 பேருக்கு வேலை கிடைப்பதில் சிக்கல்: வெளியான காரணம்

நாட்டில் சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய் (Crude Oil) இறக்குமதியாளர்களிடமிருந்து அறவிடப்படும் வரியை (SSCL) கிலோ ஒன்றுக்கு ஐந்து ரூபாவால் அதிகரிப்பது மற்றும் தேங்காய் எண்ணெய் சுத்திகரிப்புக்கு விதிக்கப்பட்டுள்ள VAT வரியை நீக்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதனால், தற்போது துறைமுகத்தில் சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய் இறக்குமதிக்கு கிலோ ஒன்றுக்கு 125 ரூபா அறவிடப்படுவதுடன், எதிர்காலத்தில் இது 130 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன், கடந்த வெள்ளிக்கிழமை (02) நிதியமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் இறக்குமதிக்கு கிலோவிற்கு 150 ரூபா சமூக பாதுகாப்பு வரியை மேலும் 10 ரூபாவினால் அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதனால், சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் இறக்குமதிக்கு கிலோவுக்கு விதிக்கப்படும் சமூக பாதுகாப்பு வரி 160 ரூபாயாக உயரும்.

சுத்திகரிக்கப்படாத ஒரு கிலோ தேங்காய் எண்ணெய் இறக்குமதிக்கு அறவிடப்படும் 125 ரூபா, சமூக பங்களிப்பு பாதுகாப்பு வரிக்கு மேலதிகமாக, நாட்டில் தேங்காய் எண்ணெய் சுத்திகரிக்கப்பட்ட பின்னரும் செலுத்த வேண்டியிருப்பதால் 09 தேங்காய் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைகளில் 07 மூடப்பட்டுள்ளன.

இவ்வாறு தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், சுமார் 15,000 பேருக்கு வேலை கிடைப்பதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...