16 2
உலகம்செய்திகள்

லெபனானை விட்டு உடனடியாக வெளியேறுமாறு மக்களை வலியுறுத்தும் அமெரிக்கா

Share

லெபனானை விட்டு உடனடியாக வெளியேறுமாறு மக்களை வலியுறுத்தும் அமெரிக்கா

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், அதன் குடிமக்களை லெபனானை (Lebanon) விட்டு உடனடியாக வெளியேறுமாறு பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க (US) தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், பிரித்தானிய வெளியுறவு செயலாளர் டேவிட் லாம்மியும் லெபனானின் நிலைமை விரைவாக மோசமடையக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கு இஸ்ரேலுக்கு (Israel) எதிராக கடுமையான பதிலடி கொடுப்பதாக ஈரான் சபதம் செய்துள்ளது.

மேலும், பெய்ரூட்டில் ஹெஸ்புல்லா தளபதி ஃபுவாட் ஷுக்ரை இஸ்ரேல் கொன்ற சில மணிநேரங்களுக்குப் பிறகு அவரது படுகொலை நடந்தது.

லெபனானை தளமாகக் கொண்ட ஹெஸ்பொல்லா, ஈரான் ஆதரவுக் குழு, அத்தகைய பதிலடியில் பெரும் பங்கு வகிக்கக்கூடும் என்பதுடன் இது ஒரு தீவிரமான இஸ்ரேலிய பதிலைத் தூண்டும்.

இந்நிலையிலேயே, லெபனான் குடியேற்றவாசிகளை வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் அவ்வாறு வெளியேற விரும்பாதவர்களை ஒரு நிரந்தர, பாதுகாப்பான இடத்தை அமைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...

26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப...