15
இலங்கைசெய்திகள்

ரணிலுக்கான ஆதரவுக்கூட்டம் : தலதா அத்துகோரள சென்றமை குறித்து சர்ச்சை

Share

ரணிலுக்கான ஆதரவுக்கூட்டம் : தலதா அத்துகோரள சென்றமை குறித்து சர்ச்சை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) ஆதரிக்கும் நிலைப்பாட்டை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள நிராகரித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் மாகாணசபை உறுப்பினர்களுக்கான செயலமர்வு, பத்தரமுலவில் உள்ள வோட்டர்ஸ் எட்ஜ் விருந்தகத்தில் நேற்று(31) இடம்பெற்றது.

இந்த தருணத்தில் விருந்தகத்தில் இருந்து தலதா அத்துக்கோரள வெளியே வந்தபோது அங்கு செய்தி சேகரிப்புக்காக காத்திருந்த செய்தியாளர்கள், தலதாவிடம் கேள்விகளை எழுப்பினர்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பீர்களா என்ற வினாவை அவர்கள் தொடுத்தனர். எனினும் தாம் வேறொரு நிகழ்ச்சிக்கு வந்ததாகவும், ஜனாதிபதி விக்ரமசிங்கவை ஆதரிக்கும் கூட்டத்துடன் தாம் இருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் ஜனாதிபதியுடன் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. கடந்த காலங்களில் அவருடன் பேசி இருக்கிறேன். இன்றும் அதைச் செய்கிறேன். நாளையும் அப்படித்தான் இருக்கும் என்று ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....