24 66a44c3c2c213
இலங்கைசெய்திகள்

தமிழர் பெருந்தோட்டங்களை நவீன மயப்படுத்தும் வரைபடத்தை வெளியிட்ட ரணில்

Share

தமிழர் பெருந்தோட்டங்களை நவீன மயப்படுத்தும் வரைபடத்தை வெளியிட்ட ரணில்

நாட்டின் காலாவதியாகியுள்ள பெருந்தோட்டத் துறையை நவீன மற்றும் செழிப்பான விவசாய வணிகமாக மாற்றுவதற்கான வரைபடத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) வெளியிட்டுள்ளார்.

இந்த மூலோபாயத்தின் முக்கிய தூண்களில், காலனித்துவ காலத்தின் ‘லைன்-ரூம்’ வரிசை வீடுகள் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் தோட்ட நிறுவனத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையே சாத்தியமான வருவாய் பகிர்வு மாதிரி என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.

“எங்களுக்கு தோட்டங்கள் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். எங்களுக்கு ஒரு செழிப்பான விவசாய வணிகம், நிறைய நிலம் வைத்திருப்பவர்கள் மற்றும் ஒரு பெரிய நிர்வாக நிறுவனம் தேவை, அதில் இருந்து அதிக வருமானம் கிடைக்கும். இதற்காக நாங்கள் உள்ளே இருந்து சீர்திருத்தங்களைத் ஆரம்பிக்கப்போகிறோம்” என்று ஜனாதிபதி விக்ரமசிங்க நேற்று (26.07.2024) கொழும்பில் சர்வதேச தேயிலை மாநாடில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.

இதன்படி, எல்லா லைன் அறைகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை அரசாங்கத்துக்கு பொறுப்பெடுத்து, அவற்றை கிராமங்களாக வர்த்தமானியில் பிரசுரிக்கப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ‘லைன்-ரூம்’ கலாசாரம், நுவரெலியாவில் உள்ள பல பரிமாண வறுமைக் குறிகாட்டிகளின் உயர் வீதத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது.

அத்துடன், வடக்கு மாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விட இது அதிகமாக உள்ளது என்றும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...

நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை

ரணில் சஜித் கூட்டணி – அனுர அரசுக்கு கவலை இல்லை.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

ஜனாதிபதி மாளிகை 12
இலங்கை

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்களா?

வெளிநபர்கள் ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை...

veppam 2
இலங்கை

இன்றைய நாளில் இலங்கையில் உச்சம் தொட்ட வெப்பநிலை.

இன்றைய தினம் நாட்டின் அதி உச்ச வெப்பநிலையாக திருகோணமலை வளிமண்டலவியல் மையத்தில் 39.9 டிகிரி செல்சியஸாகப்...