4 35
இலங்கைசெய்திகள்

இலங்கையர்கள் பெற்றுள்ள கடன் தொடர்பில் வெளியான தகவல்

Share

இலங்கையர்கள் பெற்றுள்ள கடன் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் 22 வீதமான குடும்பங்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக கடனில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட குடும்ப கணக்கெடுப்பு (2023) அறிக்கையின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதன்படி, அடமானக் கடன்களின் விகிதம் 31 சதவீதமாக பதிவாகியுள்ளது.

நாட்டில் 22.3 வீதமான குடும்பங்கள் தமது அன்றாட உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக கடன் பெற்றுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.

அரச மற்றும் தனியார் வங்கிகளிடமிருந்து 21.9 வீதமும், சமுர்த்தி வங்கிகளிடமிருந்து 7.1 வீதமும், கடன் வழங்குபவர்களிடமிருந்து 9.7 வீதமும், நிதி மற்றும் குத்தகை நிறுவனங்களிடமிருந்து 8.7 வீதமும் மக்கள் கடன் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குடும்ப அலகுகளில் கடன் சுமையால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் பண அழுத்தம் ஆகியவை நலனையும் பாதிக்கின்றதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...