2 25
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்திலிருந்து வெளியேற தயாராகும் மகிந்த அணி

Share

அரசாங்கத்திலிருந்து வெளியேற தயாராகும் மகிந்த அணி

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து அரசாங்கத்துடன் இணைய இணக்கம் தெரிவித்துள்ள 25 நாடாளுமன்ற உறுப்பினர்களை உடனடியாக அழைத்து வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் வரை ஐக்கிய மக்கள் சக்தி கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைய மாட்டார்கள் என ஜனாதிபதிக்கு விசுவாசமான கட்சிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்திற்குள் கொண்டு வருவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தடையாக இருந்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் இருந்து வெளியேறத் தயார் என அந்தக் கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் இருந்து விலகுவதற்கும் வெளியில் இருந்து ஆதரவு தருவதற்கும் தயார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...