24 669b499c78cb4
இலங்கைசெய்திகள்

ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் நகர்வு: ராஜபக்சர்கள் தொடர்பில் எச்சரிக்கை

Share

ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் நகர்வு: ராஜபக்சர்கள் தொடர்பில் எச்சரிக்கை

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகவுள்ள தற்போதைய அமைச்சரவையில் ராஜபக்சர்கள் அங்கம் வகிக்கின்ற போதிலும் அவர்களின் தேர்தல் தொடர்பான நிலைப்பாடானது தற்போது வெளிப்படையான அரசியல் மோதலுக்கு இட்டுச்சென்றுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நடைமுறையானது ராஜபக்சர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான பிளவை விரிவுபடுத்தும் சாத்தியம் உள்ளது எனவும் கூறப்படுகிறது.

ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் 22ஆம் அரசியலமைப்பு திருத்தத்தை வெளியிட்டதன் பின்னர் அரசியல் அரங்கில் பெரும் கேள்வி நிலைகள் தோன்றியுள்ளன.

இதன் பின்னணியிலேயே இவ்வாறான எச்சரிக்கையை அரசியல் ஆர்வலர்கள் முன்வைத்துள்ளனர்.

ரணிலின் இந்த நடவடிக்கையானது அவரது அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கான ஒரு மூலோபாய நடவடிக்கையாக பார்க்கப்படலாம் என ஒரு சாராரின் கருத்துக்கள் அமையப்பெற்றுள்ளது.

மேலும், ராஜபக்சர்களின் அரசியல் அபிலாஷைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும், சர்ச்சைக்குரிய மற்றும் கணிக்க முடியாத தேர்தல் நகர்வுக்கு களம் அமைக்கும் எனவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...