செய்திகள்இலங்கை

பரீட்சைகள் ஒத்திவைக்க தீர்மானம் – கல்வி மறுசீரமைப்பு அமைச்சு

Share

உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை என்பவற்றை, அடுத்த வருடத்திற்கு பிற்போடத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ் வருடத்திற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை என்பவற்றை, எதிர்வரும் 2022ஆம் ஆண்டிற்கு ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையையும், நவம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி வரை இவ் வருடத்திற்கான உயர்தரப் பரீட்சையையும் நடாத்துவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்திருந்தது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் தொற்றுக் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் அரச பரீட்சைகளை நவம்பர் மாதத்தில் நடாத்துவது தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இந்நிலையிலேயே 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை என்பன, அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை தொடர்பான அறிவித்தலை, கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த விடுத்துள்ளார்.

துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் ஏனைய முடிவுகள் தொடர்பில் அறிவிக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...