Shehan Semasinghe
செய்திகள்இலங்கை

வீதிகள் துரித அபிவிருத்தி! – இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

Share

விவசாயம் செய்யப்பட்டு வரும் பிரதேச வீதிகள், வைத்தியசாலைகள் பாடசாலைகளுக்கு உட்பிரவேசிக்கும் மற்றும் அவைகளுக்கு அருகில் உள்ள வீதிகள் அனைத்திற்கும் முன்னுரிமை வழங்கப்பட்டு நெடுஞ்சாலை அமைச்சு ஊடாக துரித அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

செளபாக்யா எதிர்கால கொள்கை பிரகடன திட்டத்திற்கமைய “முன்னுரிமை வீதி” அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விவசாய செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் பிரதேச வீதிகள் அபிவிருத்தி செய்யப்படும் தேவைகள் உணரப்பட்டு இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த வீதிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்த் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைய இத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பிரதேச வீதிகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் விவசாய மக்கள் தங்களின் உற்பத்திகளை தாமதமின்றி பொருளாதார மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்ல முடியும்.

அதன் மூலம் விவசாய மக்கள் பொருளாதாரத்தை இலகுவில் விருத்தி செய்து கொள்ள முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...