24 6691cea577c7c
இலங்கைசெய்திகள்

பாதாள உலகக்குழுத்தலைவர் விடுத்துள்ள மற்றுமொரு அச்சுறுத்தல்

Share

பாதாள உலகக்குழுத்தலைவர் விடுத்துள்ள மற்றுமொரு அச்சுறுத்தல்

கைதிகளின் கையடக்கத் தொலைபேசிகளை கைப்பற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என பூஸா சிறைச்சாலையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரை பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக குறித்த அதிகாரி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாரிய குற்றவாளிகளிடம் உள்ள கைத்தொலைபேசிகளை கண்டுபிடிக்கும் நடவடிக்கையை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது நவீன கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சார்ஜர்கள், டேட்டா கேபிள் மற்றும் சிம் அட்டைகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அலுவலகம் தெரிவித்திருந்தது.

இதனையடுத்தே பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சிறைச்சாலையின் சிரேஷ்ட அதிகாரியை அச்சுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, வருடாந்த சிறைச்சாலை தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள கைதிகளை பார்வையிடும் விசேட சந்தர்ப்பம் எதிர்வரும் 16ஆம் திகதி வழங்கப்படும் என சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
QR முறைமை
இலங்கை

QR முறைமை நீக்கப்படுமா?

எரிபொருள் விநியோகத்திற்கான QR முறையும், வரம்புகளும் நீக்கப்பட வேண்டுமென பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளதுடன், இலங்கை...

bus bike accident 1
இலங்கை

தாயையும் மகனையும் காவுகொண்ட கோரவிபத்து!

பகமூண, தமன பகுதியில், பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர்...

கடூழிய சிறைத்தண்டனை
இலங்கை

சிறுமி துஸ்பிரயோகம் – சந்தேக நபருக்கு வவுனியா நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு.

கடந்த 2015, 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா, தரணிக்குளம் பிரதேசத்தில் தாயினால் கைவிடப்பட்ட தந்தையின்...

பேருந்து கவிழ்ந்து விபத்து
இலங்கை

பேருந்து கவிழ்ந்து விபத்து – மஹகொடையாய பகுதியில் சம்பவம்!

மொனராகலையிலிருந்து தனமல்வில நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று புத்தல –...