24 66910b7955d1b
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் ரணில்

Share

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் ரணில்

ஜனாதிபதித் தேர்தலை உரிய காலத்தில் நடத்த வேண்டுமென்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியாகவுள்ளார் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இவ்வாறான பின்னணியில் நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பவே எதிர்க்கட்சியினர் இச்சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை கொண்டு வந்துள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திப் போடுவதற்கான எந்த வித தீர்மானத்தையும் அமைச்சரவை மேற்கொள்ளவில்லை.

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் அரசியலமைப்பின் ஏற்பாடுகளில் காணப்படும் சிக்கலை தீர்ப்பதற்காகவே யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அப்பாவி மக்களை பணயக் கைதிகளாக வைத்து தமது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கும் ஜோசப் ஸ்டாலின் மற்றும் தொடருந்து தொழிற்சங்கத் தலைவர்களும் பயங்கரவாதிகளே என்றும் அமைச்சர் கஞ்சன தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Missing Persons Nuwara Eliya
இலங்கை

நிலவும் சீரற்ற காலநிலையால் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று மாலை நேர நிலவரப்படி 581 குடும்பங்களைச்...

Displaced
இலங்கை

நுவரெலியாவில் தொடரும் கனமழை – தற்காலிக முகாம்களில் தஞ்சம் கோரிய மக்கள்.

நுவரெலியாவில் சீரற்ற வானிலை காரணமாக, பல தாழ்நில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், மரங்களும் முறிந்து விழுந்துள்ளதாக...

Ministry of Defence
இலங்கை

பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அவசர அறிவித்தல்.

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு தொடர்புடைய அதிகாரிகளுக்கு...

Electricity bills
இலங்கை

மின்சார கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, 2026 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களில் எவ்வித...