2 10
இலங்கைசெய்திகள்

பாடசாலை மாணவி சடலமாக மீட்பு

Share

பாடசாலை மாணவி சடலமாக மீட்பு

நிவித்திகல – வட்டபொட பகுதியிலுள்ள இறப்பர் தோட்டத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவியின் சடலம் மீட்கப்பட்ட இடத்திலிருந்து சில அடி தூரத்தில் மாணவியின் பாடசாலை புத்தகப் பை மற்றும் இரத்தக்கறை என்பன காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகாமையில் இறப்பர் மரம் வெட்டப்பட்ட நிலையில் இருந்ததாகவும், பணியில் ஈடுபட்டிருந்தவர்களின் கவனக்குறைவால் மரத்தின் ஒரு பகுதி மாணவியின் தலையில் விழுந்திருக்கலாம் எனவும் மாணவியின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எனினும், தமது மகளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கு உதவி கேட்ட போது அங்கிருந்தவர்கள் உதவவில்லை என மாணவியின் தாய் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்நிலையில், சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தி நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இரத்தினபுரி பதில் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
10 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையர்களின் அதீத சீனிப் பயன்பாடு: ஈறு நோய் பாதிப்பு அதிகரிப்பு – எச்சரிக்கை விடுத்த வைத்தியர்!

இலங்கையில் ஒவ்வொரு இரண்டு பெரியவர்களில் ஒருவருக்கு ஈறு தொடர்பான நோய்கள் இருப்பதாக வாய் சுகாதார விசேட...

09 6
செய்திகள்இலங்கை

பேரிடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அரச அதிகாரிகளுக்கு விசேட கொடுப்பனவு: பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக ஏற்பட்ட பேரிடர் நிலைகளின் போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில்...

08 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விநியோகத்தை எளிமைப்படுத்தும் புதிய செயலி: யாழ். இந்துக் கல்லூரி மாணவரின் புத்தாக்கம்!

எரிபொருள் விநியோகத்தில் நிலவும் சவால்களைத் தொழில்நுட்ப ரீதியாகத் தீர்க்கும் நோக்கில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி உயர்தர...

01 6
செய்திகள்உலகம்

அவுஸ்திரேலியாவில் இலங்கைப் பெண் மற்றும் அவரது துணைவர் சடலமாக மீட்பு: காவல்துறை விசாரணை!

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலுள்ள லோட்ரோப் பள்ளத்தாக்கு பகுதியில், ஹேர்ன்ஸ் ஓக் (Hernes Oak) எனும் கிராமப்புறப்...