24 667f7cfe0ff26 25
இலங்கைசெய்திகள்

வீதியில் செல்லும் பெண்களிடம் நகைகளை அறுக்கும் நகைக்கடை உரிமையாளர் கைது

Share

வீதியில் செல்லும் பெண்களிடம் நகைகளை அறுக்கும் நகைக்கடை உரிமையாளர் கைது

நெடுஞ்சாலையில் பயணிக்கும் பெண்களின் கழுத்தில் வாளை வைத்து அச்சுறுத்தி அவர்கள் அணிந்திருக்கும் தங்க நகைகளை கொள்ளையடிக்கும் கும்பலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் தங்க நகைக்கடை உரிமையாளர் மற்றும் பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருடப்பட்ட சில தங்க ஆபரணங்கள், வாள், மோட்டார் சைக்கிள் மற்றும் கைக்குண்டு போன்றவற்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சில காலமாக மரதகஹமுல துனகஹாவை சுற்றியுள்ள கிராமங்களில் வீதிகளில் பயணிக்கும் பெண்களிடம் தங்க ஆபரணங்கள் திருடப்படுவதாக செய்திகள் வெளியாகி வந்தன.

இதன்படி, பாலியபிட்டிய பிரதேசத்தில் இரண்டு தங்கச் சங்கிலிகளை அறுத்துக்கொண்டு ஓடிய மோட்டார் சைக்கிளை துரத்திச் சென்ற காவல்துறை குழு, படல்கம காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஹொரகண்டவில பிரதேசத்தில் சந்தேகநபர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதி கவிழ்ந்தது.

அதன்போது, ​​பிரதேச மக்களின் உதவியுடன் கொள்ளையர்களை கைது செய்துள்ளதாகவும், மோட்டார் சைக்கிளும் பலத்த சேதமடைந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மினுவாங்கொடை, ஹொரம்பெல்ல பிரதேசத்தில் தற்காலிகமாக வசிக்கும் மீரிகம ஹல்பே பிரதேசத்தை சேர்ந்த ஒருவரும், ஜா அல பிரதேசத்தை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
சீரற்ற காலநிலை
இலங்கை

காலநிலை தாக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அதிகரிப்பு – துரித கதியில் இடம்பெறும் சீரமைப்பு பணிகள்.

தற்போது நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 ஆயிரத்து...

கைக்குண்டுகள்
இலங்கை

இரத்மலானை பகுதியில் வீட்டின் மேல் வீசப்பட்ட கைக்குண்டுகள்.

இரத்மலானை ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...