3e4 2
செய்திகள்இலங்கை

விவசாயக் கொள்கை அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிப்பு!

Share

தேசிய விவசாயக் கொள்கை அறிக்கையை அடுத்தவாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் ஆலோசனைக்கு அமைவாக, முதன் முறையாக தொகுக்கப்பட்டுள்ள தேசிய விவசாயக் கொள்கை அறிக்கை, அடுத்தவாரம் அமைச்சரவையின் அங்கிகாரத்துக்காக சமர்பிக்கப்படவுள்ளதாக, விவசாய அமைச்சின் ஊடகப்பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தேசிய விவசாய கொள்கையை வகுப்பதற்கான குழுவினால் தயாரிக்கப்பட்ட விவசாயக் கொள்கையின் சிங்கள, ஆங்கில பிரதிகள், விவசாய அமைச்சருக்கு நேற்று வழங்கப்பட்டன.

இதன்போது கருத்துரைத்த விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே,

‘தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்துக்குள், தேசிய விவசாயக் கொள்கை தயாரிக்கப்பட்டமை நினைத்து மகிழ்வடைகிறேன்.

இறக்குமதி பொருளாதாரத்துக்குப் பதிலாக உற்பத்தி பொருளாதாரத்தை நோக்கி நாட்டை வழிநடத்துவதில் விவசாய அமைச்சர் என்ற முறையில் எனக்கு அதிக பங்கு உண்டு.

தேசிய விவசாயக்கொள்கையானது, இலங்கை மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கான உரிமையை உறுதிசெய்யும். அத்துடன், நச்சுத் தன்மையற்ற உணவு உண்ணும் முறைமைக்கு வழிகாட்டும்.

விவசாய உற்பத்தி மற்றும் மூலப்பொருள் உற்பத்தி மூலம், கிராம அளவில் சுயதொழில்களை வலுப்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தும்’ குறிப்பிட்டார்.

இதேவேளை, தேசிய விவசாய கொள்கையின் மூலம், இலங்கையை நிலைபேறான பசுமையான வலயமாக மாற்றி அமைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு, மக்களும் ஒத்துழைப்பு வழங்கி செயற்பட முடியும்’ என்று, விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
07 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாவட்டங்களுக்கு நாளை கடும் வெப்ப எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்!

இலங்கையின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் நாளை (மார்ச் 22, 2026) வெப்பமான வானிலை நிலவக்கூடும்...

06 17
செய்திகள்இந்தியா

வீட்டு வேலைகளைக் கணவனும் பகிர வேண்டும்: விவாகரத்து வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் அறிவுரை!

வீட்டு வேலைகளைக் கணவனும் மனைவியும் சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், மாறிவரும் காலத்திற்கு ஏற்பக்...

05 19
செய்திகள்உலகம்

டியாகோ கார்சியா மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: அமெரிக்காவின் போர் வியூகத்தை மாற்றும் புதிய திருப்பம்!

இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள அமெரிக்க-பிரித்தானிய கூட்டு இராணுவத் தளமான டியாகோ கார்சியாவை (Diego Garcia) இலக்கு...

04 19
செய்திகள்இலங்கைஉலகம்

கியூபாவில் மின்சாரத் தடை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு: குடிநீரின்றித் தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள்!

கியூபாவில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை...