tamilni Recovered 9 scaled
இலங்கைசெய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு அனுர ஆட்சியில் நீதி : பிமல் ரத்நாயக்க பகிரங்கம்

Share

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு அனுர ஆட்சியில் நீதி : பிமல் ரத்நாயக்க பகிரங்கம்

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மக்களுக்கு தேசிய மக்கள் சக்தி (JVP) அரசாங்கத்தின் கீழ் நீதி நிலைநாட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலை கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) வெளியிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் தெற்கில் வாழும் மக்களுக்கும், வடக்கு – கிழக்கு மலையக வாழ் தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் இன, மத, சாதி, நிற பேதமின்றி அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய நாட்டை உருவாக்க முடியும்.

வடக்கில் போரினால் பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், காணாமல் போனவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை ஆட்சியில் இருந்த ஒவ்வொரு அரசாங்கமும் ஏற்றுக்கொண்டுள்ளது, ஆனால் அவர்களுக்கு நீதி வழங்கப்படவில்லை. எனவே எங்கள் அரசாங்கத்தின் கீழ் நீதி நிலைநாட்டப்படும்.

யுத்த காலத்தின் பின்னர் வடக்கு மக்களுக்கு சொந்தமான காணிகளை இராணுவம் விட்டுச் சென்ற போதிலும் அவர்களுக்கு அந்த காணிகள் உரியதாக இல்லை, அவர்களுக்கு நியாயமான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும், அதனை பாதுகாக்கும் நாடு என்பதை உணர வேண்டும்.“ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி அனுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அதிபர் வேட்பாளராக போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
26 696cda61cd108
செய்திகள்அரசியல்இலங்கை

எம்.பி-க்களின் ஓய்வூதிய ரத்து: உயர் நீதிமன்ற விசாரணை நிறைவு; இரகசியத் தீர்ப்பு சபாநாயகருக்கு!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்காக அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்...

electrician at work stockcake
செய்திகள்இலங்கை

இனி எலக்ட்ரீஷியன்களுக்கு உரிமம் கட்டாயம்! NVQ தகுதி இன்றி மின் வேலைகள் செய்யத் தடை!

இலங்கையில் மின் பாதுகாப்பு மற்றும் பொறியியல் தரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், மின்சார வல்லுநர்களுக்கான (Electricians) புதிய...

articles2Fr9PnSL7cktbisfxCs5bm
செய்திகள்உலகம்

உலக சுகாதார அமைப்பிலிருந்து இன்று (22) உத்தியோகபூர்வமாக விலகியது அமெரிக்கா! நிதி நெருக்கடியில் WHO!

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் உலக...

Mweb Maldives 630x375 1
செய்திகள்உலகம்

மாலைத்தீவு நாட்டினருக்கு நற்செய்தி: இலங்கைக்கு வர 90 நாள் விசா விலக்கு அளிப்பு!

வருகை அல்லது சுற்றுலா நோக்கங்களுக்காக இலங்கைக்கு வரும் மாலைத்தீவு குடிமக்களுக்கு 90 நாள் வருகை விசா...