tamilni Recovered 10 scaled
இலங்கைசெய்திகள்

ஒரு கோடி ரூபாய்க்கு போலி மாணிக்கக்கல் விற்க முயற்சித்த இருவர் கைது!

Share

ஒரு கோடி ரூபாய்க்கு போலி மாணிக்கக்கல் விற்க முயற்சித்த இருவர் கைது!

உயர் பெறுமதியான மாணிக்கக்கல் என்று பொய் கூறி, போலியான கல் ஒன்றை விற்பனை செய்ய தயாராகிய இருவர் ஆனமடுவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (23) இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, ஆனமடுவ பரமாகந்த கிராமத்தைச் சேர்ந்த 34 மற்றும் 38 வயதுடைய பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், சந்தேகநபர்கள் இருவரும் ஆனமடுவ நகரிலுள்ள வர்த்தகர் ஒருவருக்கு போலியான மாணிக்கக்கலை ஒரு கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய முயற்சித்துள்ளனர்.

இது தொடர்பில் சந்தேகம் ஏற்பட்ட வர்த்தகர் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

ஒரு கோடி ரூபாய்க்கு போலி மாணிக்கக்கல் விற்க முயற்சித்த இருவர் கைது!
மேலும், சந்தேகநபர்கள் ஆனமடுவ நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...