tamilni Recovered 2 scaled
இலங்கைசெய்திகள்

சுகாதார அமைச்சின் பதவிகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்

Share

சுகாதார அமைச்சின் பதவிகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்

சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் (Minister of Health) பதவி உட்பட அந்த அமைச்சின் பல உயர் பதவிகளில் எதிர்வரும் மாதத்தின் முதல் வாரத்தில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை தற்போதைய சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன (Ramesh Pathirana) பதவி விலகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இம்மாத இறுதியில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் (Ranil Wickremesinghe) நிரந்தரமாக இணையவுள்ள ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) சுகாதார அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களுக்காக பழிவாங்கப்பட்ட வைத்தியர் ஜயருவன் பண்டார (Jayaruwan Bandara) மற்றும் வைத்தியர் சமல் சஞ்சீவ (Samal Sanjeeva) ஆகியோருக்கு தகைமையின் அடிப்படையில் உரிய பதவிகளை வழங்காத சுகாதார அமைச்சரின் செயற்பாடுகள் குறித்து ஆளும் கட்சியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அத்துடன், சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம், மருத்துவ விநியோகப் பிரிவு, மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை, மருத்துவ பரிசோதனை நிறுவனம் மற்றும் அரச மருந்துக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் பதவிகளிலும் மாற்றம் ஏற்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

 

Share
தொடர்புடையது
rent 1200px 05 09 23
செய்திகள்இலங்கை

50 ஆண்டுகால வாடகைச் சட்டத்தில் மாற்றம்: புதிய குடியிருப்பாளர்கள் பாதுகாப்புச் சட்டமூலம் குறித்து மக்கள் கருத்து கோரல்!

இலங்கையில் 1972 ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலுள்ள பழைய வாடகைச் சட்டத்தை நீக்கிவிட்டு, உரிமையாளர் மற்றும்...

26 6981e649399d3
செய்திகள்இலங்கை

பெண் காவலரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கான்ஸ்டபிளுக்கு மரண தண்டனை!

சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு கொழும்பு கோட்டை பகுதியில் பெண் காவலர் ஒருவரைக் கொடூரமாகக் கொலை...

20260203 141546
செய்திகள்அரசியல்இலங்கை

இனவாதமற்ற நாடு என்பது அரசின் போலிப் பிரச்சாரம்! – சுதந்திர தினத்தைக் கரி நாளாக அனுஷ்டிக்க ரெலோ தீர்மானம்.

தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் “இனவாதமற்ற, மதவாதமற்ற நாடு” என்ற கோஷம் ஒரு போலிப் பிரச்சாரம்...

1006733 stalin
செய்திகள்இலங்கை

தமிழக மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்க ஸ்டாலின் நினைத்தால் முடியும்! – வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் காட்டம்.

இலங்கைக் கடல் எல்லைக்குள் இந்தியக் கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைந்து முன்னெடுக்கும் அடாவடித்தனங்கள் குறித்து அரசாங்கமும், கடற்றொழில்...