3 7
உலகம்செய்திகள்

உலகக் கிண்ணப் போட்டித் தொடருக்கு தகுதி பெற்ற நாடுகள்

Share

உலகக் கிண்ணப் போட்டித் தொடருக்கு தகுதி பெற்ற நாடுகள்

எதிர்வரும் 2026ம் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் விளையாடுவதற்கு 12 நாடுகள் தகுதி பெற்றுக்கொண்டுள்ளன.

அடுத்த உலகக் கிண்ணப் போட்டித் தொடரிலும் மொத்தமாக 20 நாடுகள் பங்கேற்க உள்ளன.

தற்பொழுது நடைபெற்று வரும் உலகக் கிண்ணப் போட்டித் தெடரில் சுப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுக்கொண்ட அணிகள், உலக தர வரிசையில் முன்னணி வகிக்கும் நாடுகள் மற்றும் போட்டித் தொடரை ஏற்பாடு செய்யும் நாடுகள் என்ற அடிப்படையில் 12 நாடுகள் தகுதி பெற்றுக் கொண்டுள்ளன.

ஏனைய 8 நாடுகளும் தகுதிகாண் போட்டிகள் மூலமும் தர வரிசை மூலமும் தெரிவு செய்யப்பட உள்ளன. 2026ம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டித் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது.

இதன்படி இலங்கை இந்திய அணிகள் அடுத்த உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, உலக ரி20 தர வரிசையில் நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் தர வரிசையின் அடிப்படையில் தெரிவாகியுள்ளன.

இதன்படி, இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, தென்ஆபிரிக்கா, அமெரிக்கா, மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய 12 அணிகள் தகுதிகாண் போட்டிகளில் பங்கேற்காது உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் பங்கேற்க தகுதி பெற்றுக்கொண்டுள்ளன.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...