20 5
இலங்கைசெய்திகள்

சீனா – இலங்கை இடையிலான 13ஆவது இராஜதந்திர சுற்று பேச்சுவார்த்தை ஆரம்பம்

Share

சீனாவின் தலைநகரில் இடம்பெறும் 13ஆவது இராஜதந்திர சுற்று ஆலோசனை மாநாட்டின் இலங்கை தூதுக்குழுவிற்கு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன( Aruni Wijewardana )தலைமை தாங்கவுள்ளார்.

பீய்ஜிங்கில் இன்று நடைபெறும் சீனாவுடனான ஆலோசனை மாநாட்டில் சீனாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் சன் வெய்டாங் (Sun Weidong) தலைமையிலான குழுவுடன் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட இருதரப்பு ஈடுபாட்டின் துறைகளில் முன்னேற்றம் குறித்து இன்றைய அமர்வின்போது ஆய்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் தூதுக்குழுவில் பீய்ஜிங்கின் இலங்கை தூதுவர் மகிந்த ஜெயசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் சீனாவிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் ஆகியோரும் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

இருதரப்பு அரசியல் கலந்தாய்வுகளின் 12ஆவது சுற்று 2023 மே 30ஆம் திகதியன்று கொழும்பில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...