11 4
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுவின் ஆதரவு ரணிலுக்கே

Share

ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுவின் ஆதரவு ரணிலுக்கே

வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்குக் கிடைக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார(Palitha Range Bandara) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகவே ரணில் விக்ரமசிங்க வருவார்.

எனவே, யானை சின்னம் மாறக்கூடும். ஐக்கிய தேசியக் கட்சி வசம் 30 இலட்சம் வாக்குகள் உள்ளன. அந்த எண்ணிக்கையில் இருந்துதான் வாக்கு வேட்டை ஆரம்பமாகும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குரிய 69 லட்சம் வாக்குகளில் 39 லட்சம் கிடைத்தாலே ரணிலின் வெற்றி உறுதியாகிவிடும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...

Untitled 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள்: பாதசாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையில் இந்த ஆண்டின் கடந்த சில மாதங்களில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாகக் காவல்துறை...

Untitled 19
செய்திகள்இந்தியா

மதுரை மத்திய தொகுதி: தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக சுந்தர் சி களம்!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இடம்பெற்றுள்ள புதிய...