24 666d1124f0e5f
இலங்கைசெய்திகள்

இங்கிருந்து சிலர் சென்றால் அங்கிருந்து பலர் வருவார்கள் : சஜித்

Share

இங்கிருந்து சிலர் சென்றால் அங்கிருந்து பலர் வருவார்கள் : சஜித்

ஜக்கிய மக்கள் சக்தியில் இருந்து சிலர் சென்றால் அங்கிருந்து பலர் எம்முடன் வந்து இணைய இருக்கின்றார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்னவின் (Rajitha Senaratne) நடவடிக்கைகள் தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

உங்களுடன் இருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வேறு கட்சியுடன் இணைந்து விட்டாரா? என்று சஜித்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், ‘அப்படி எதுவும் எனக்குத் தெரியாது.

என்னை விடவும் உங்களுக்குச் சிறந்த புலனாய்வாளர்கள் இருக்கின்றார்கள் அல்லவா? அவர்களிடம் இது தொடர்பில் வினவுங்கள்.

ஆனாலும், இங்கு நான் ஒரு விடயத்தைக் கூறி வைக்க விரும்புகின்றேன். அதாவது எம்முடன் இருந்து அங்கு செல்லும் சில பேருக்கு அப்பால் அங்கிருந்து பலர் எம்முடன் இணைய இருக்கின்றார்கள்.

அங்கு யார் யார் இணைந்தார்கள் என்பதைப் பார்த்தீர்கள் அல்லவா? எனவே, தெரியாத விடயங்கள் தொடர்பில் பொய்யான கருத்துக்களை கூறிப் பலனில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
image 1200x800 41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அமைச்சரவையின் புதிய முடிவு: வீடற்ற துறவிகளின் பெற்றோர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி உதவி.

பௌத்த சாசனத்தின் நிலைத்தன்மைக்காகத் தங்களது பிள்ளைகளைத் துறவற வாழ்விற்கு அர்ப்பணித்த, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பெற்றோர்களைக்...

image 1200x800 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை: இலங்கையின் எந்தெந்தப் பகுதிகளில் மழை பெய்யும்?

இலங்கையின் தென்கிழக்கே, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடித்து வருவதால்,...

image 1200x800 32
செய்திகள்அரசியல்இலங்கை

சமன் ஏக்கநாயக்கவின் பிணை மனு: இன்று தீர்ப்பு! – ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயண நிதி விவகாரத்தில் அதிரடி!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏக்கநாயக்க, இன்று (18) மீண்டும் கொழும்பு...

image 1200x800 30 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிறப்புச் சான்றிதழுக்கு ரூ. 1,000 இலஞ்சம்: ஆலையடிவேம்பு உதவிப்பதிவாளர் கையும் மெய்யுமாகக் கைது!

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளராகப் பணியாற்றும் உதவிப்பதிவாளர் ஒருவர், பிறப்புச் சான்றிதழை...