24 66665d0c8bfc0
ஏனையவை

இரகசியமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களினால் அரசாங்கத்திற்கு நட்டம்

Share

இரகசியமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களினால் அரசாங்கத்திற்கு நட்டம்

இறக்குமதி செய்யப்பட்ட 400 சொகுசு வாகனங்களில் 06 வாகனங்கள் இரகசியமாக கடத்தப்பட்டு பொய்யான தகவல்களை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு கடத்தப்பட்ட வாகனங்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த 168 சொகுசு வாகனங்களை இரகசியமாக இறக்குமதி செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 700 கோடி ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

இந்த தகவலின் பிரகாரம் குறித்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

4 முதல் 6 கோடி ரூபா பெறுமதியான Montero, Landcruiser, சொகுசு வாகனங்கள் மற்றும் Nissan ரக சொகுசு வாகனங்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை இலங்கைக்குள் 400 சொகுசு வாகனங்கள் கடத்தப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் இரகசியப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே விடுத்த கோரிக்கைக்கு இணங்க வாகனங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
2024 11 25 Pudukkudiyiruppu MV 2
ஏனையவை

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு: 275 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை மதிப்பளிக்கும் நிகழ்வுகள் பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வரும்...

images 7 2
ஏனையவை

டெல்லி கார் வெடிப்பு ‘தெளிவான பயங்கரவாதத் தாக்குதல்’: இந்தியாவுக்கு உதவியளிக்கத் தயார் என அமெரிக்கா அறிவிப்பு!

இந்தியத் தலைநகர் டெல்லியில் அண்மையில் இடம்பெற்ற கார் வெடிப்புச் சம்பவத்தை, ஒரு “தெளிவான பயங்கரவாதத் தாக்குதல்”...