vav
செய்திகள்இலங்கை

தடுப்பூசி அட்டை கட்டாயம்! – வவுனியா பிரதேச சபை அதிரடி

Share

வவுனியா பிரதேச செயலகத்துக்குள் கொரோனாத் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மாத்திரமே நுழைய முடியும் என வவுனியா பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.

இந்த நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வவுனியா பிரதேச செயலகத்துக்குள் சேவைகளைப் பெற வருகை தருவோர் தடுப்பூசி அட்டை, தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை தம்வசம் வைத்திருப்பதுடன் குறைந்தது ஒரு தடுப்பூசியையாவது பெற்றிருத்தல் வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு தடுப்பூசிகளை பெறாது அட்டை இன்றி வருகை தருவோருக்கு நுழைவாயிலில் வைத்தே சேவை வழங்கப்படும் என வவுனியா பிரதேச செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாடளாவிய ரீதியில் தடுப்பூசி அட்டை பரிசோதனை முறை அமுல்படுத்தப்படாத நிலையில் சுகாதார அமைச்சு இந்த செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த இதுவரை தீர்மானிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...