24 665eaedf18f7a
இலங்கைசெய்திகள்

மாமனாரை வெட்டிக் கொன்ற மருமகன்

Share

மாமனாரை வெட்டிக் கொன்ற மருமகன்

பழைய தகராறு காரணமாக தனது மாமனாரை மருமகன் வாளால் வெட்டி கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் புத்தளம் மாதம்பை, செம்புகட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

நரசிம்ம கேசர பண்டாரநாயக்க சாம்சன் ஜயவீர (வயது 56) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டவராவார்.

இறந்தவரின் வீட்டிற்கு அருகில் வசித்து வரும் சகோதரியின் மகனே இந்த கொலையை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பழைய தகராறு காரணமாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மாதம்பை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 86
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் கொலைச் சதி? மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூசா உயர் பாதுகாப்புச் சிறையில்...

world 85
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபாயகரமான வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க புதிய வாட்ஸ்அப் எண்: வீடியோ ஆதாரங்களை அனுப்பக் காவல்துறை வேண்டுகோள்!

இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக உடனடி...

world 83
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்குக் கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில் புலம்பெயர்...