24 665ea42bcb780
இலங்கைசெய்திகள்

வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம்

Share

வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம்

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது மற்றும் முற்றாக பாதிப்படைந்த வீடுகளை மீள நிர்மாணிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இது தொடர்பான யோசனையை நேற்று (03) அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

இதனடிப்படையில், எந்தவொரு சுற்றறிக்கையையும் நம்பாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்கவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் பணத்தின் அளவை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டது.

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக உலக சுற்றாடல் தின கொண்டாட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டை பயன்படுத்துமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க மேலும் பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், நாளைய தினம் நடைபெறவுள்ள உலக சுற்றாடல் தினத்திற்கான தேசிய கொண்டாட்டத்தை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர (Janaka Wakkumbura) மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...