24 665ea42bcb780
இலங்கைசெய்திகள்

வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம்

Share

வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம்

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது மற்றும் முற்றாக பாதிப்படைந்த வீடுகளை மீள நிர்மாணிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இது தொடர்பான யோசனையை நேற்று (03) அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

இதனடிப்படையில், எந்தவொரு சுற்றறிக்கையையும் நம்பாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்கவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் பணத்தின் அளவை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டது.

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக உலக சுற்றாடல் தின கொண்டாட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டை பயன்படுத்துமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க மேலும் பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், நாளைய தினம் நடைபெறவுள்ள உலக சுற்றாடல் தினத்திற்கான தேசிய கொண்டாட்டத்தை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர (Janaka Wakkumbura) மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 81
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு கால விசேட பேருந்து சேவை: கொழும்பிலிருந்து 1,500 பேருந்துகள் சேவையில்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பயணிக்கும் பொதுமக்களின் வசதிக்காக, இலங்கை போக்குவரத்துச்...

world 80
உலகம்செய்திகள்

2028 அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியா? கமலா ஹாரிஸின் பதில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

2024-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ், 2028-ஆம்...

world 79
செய்திகள்உலகம்

விண்வெளி வரலாற்றில் புதிய சாதனைகளுடன் தரையிறங்கியது ஓரியன்!

அரை நூற்றாண்டு கால இடைவெளிக்குப் பிறகு நிலவுக்குச் சென்ற மனிதகுலத்தின் முதல் பயணமான ஆர்ட்டெமிஸ் II...

world 78
உலகம்செய்திகள்

பெய்ரூட்டில் தங்கியிருக்க லெபனான் பிரதமர் முடிவு: அமெரிக்கா மற்றும் ஐநா பயணம் ஒத்திவைப்பு!

லெபனான் பிரதமர் நவாஃப் சலாம், அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு மேற்கொள்ளவிருந்த தனது உடனடிப்...