24 665c38d01c8e7
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளின் தலைவர் உருவாக்கிய கூட்டமைப்பை அழித்தவர்கள்…! சீற்றம்

Share

விடுதலைப் புலிகளின் தலைவர் உருவாக்கிய கூட்டமைப்பை அழித்தவர்கள்…! சீற்றம்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழித்தவர்கள், தாமே ஓரணியாக வர முடியாத நிலையில், மக்களை ஒன்று படுத்தப்போவதாகக் கூறுவது வேடிக்கையானது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது நடைமுறைச் சாத்தியமில்லாத ஒன்றென தெரிந்தும், தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் முனகிக் கொண்டே ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் அத்தனை பேரும் தான் பிரபாகரன் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழித்தவர்கள். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது கல்லில் நார் உரிக்கும் செயற்பாடு என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும், அவற்றின் தலைவர்களும் ஒன்றுபட போவதில்லை. பதவிப் போட்டிகளைத் தீர்க்க முடியாத கட்சிகள் மக்கள் பிரச்சினையைத் தீர்ப்பதாகக் கூறுவது ஏமாற்று வேலையாகும்.

ஆக மொத்தத்தில் சஜித், ரணில், அனுர, பகிஷ்கரிப்பு, தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற பஞ்ச நிலை முடிவுகளைத் தான் மக்கள் பகிர்ந்து கொள்ளப் போகிறார்கள்.

மக்களின் இந்த முடிவுகளுக்கு தமிழ்க் கட்சிகளைத் தவிர வேறு யாரும் காரணமாக இருக்க முடியாது. பட்டுணர்ந்தும் தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட மறுப்பது துரதிஸ்டமானது.

தமிழ் மக்களின் சாபக்கேடானது. அம்பாறை பறிபோய்விட்டது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் பிரதிநிதித்துவம் திருகோணமலையில் பறிபோய்விடும்.

இப்படியிருக்க அதிபர்த் தேர்தலில் இராமன் வென்றாலும் இராவணன் வென்றாலும் ஒன்றுமே நடக்கப்போவதில்லை என சொல்லிக் கொண்டு முட்டாள் தனமான முடிவுகளை எடுக்காமல் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
New Project 185 1
செய்திகள்அரசியல்இலங்கை

லண்டனில் ரில்வின் சில்வாவுக்கு எதிராகப் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்!

ரில்வின் சில்வா கடந்த 21ஆம் திகதி லண்டனுக்குச் சென்றார். அவர் நேற்றுப் பிற்பகலில், லண்டன் –...

4OIQC0T image crop 26859
செய்திகள்இலங்கை

இளம் பெண்கள்: போதிய ஆதரவின்றி பாலியல் தொழிலுக்குத் திரும்புவதாக அறக்கட்டளை கவலை!

18 வயதில் நன்னடத்தை மற்றும் சிறுவர் தடுப்பு நிலையங்களை விட்டு வெளியேறும் பல இளம் பெண்கள்,...

1763786264 landslide 6
செய்திகள்இலங்கை

கடுகண்ணாவ கோர விபத்து: அபாயகரமான பகுதியாக அறிவிப்பு – 6 பேர் பலி!

அண்மையில் கடுகண்ணாவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தினை அடுத்து, அந்தப் பகுதி மிகவும் அபாயகரமானதென அடையாளம்...

AP23249341908962 1763956497
உலகம்செய்திகள்

மலேசியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களுக்குத் தடை: சைபர் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கம்!

அடுத்த ஆண்டு முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய மலேசியா தீர்மானித்துள்ளதாக...