24 6657e76669eab
இலங்கைசெய்திகள்

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்

Share

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்

குருநாகல்-குளியாப்பிட்டி மருத்துவ அதிகாரி அலுவலகத்தினால், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சுகாதாரப் பரிசோதனையின்போது, குளியாப்பிட்டி பேருந்து நிலையத்தில் உள்ள சாரதிகள் மற்றும் வர்த்தகர்கள் உட்பட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் (SLTB) உயர் இரத்த அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பது தெரியவந்துள்ளது.

இதன் மூலம் அவர்கள் அதிக ஆபத்தில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதுடன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அனைத்து இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களும் உயர் இரத்த அழுத்தத்தால் (Blood Pressure) பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அவர்கள் இருதய நோய்களுக்கு ஆளாக நேரிடும் என்று மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பிரதேசத்தில் பணியாற்றும் அனைத்து தனியார்துறை ஊழியர்கள் மற்றும் தனியார் பேருந்து நடத்துனர்களுக்கும் முறையான மருத்துவ பரிசோதனைகளை வழங்குவதற்காக விரைவில் மருத்துவ முகாமை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

சமூகத்தின் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...

ஜெயலத் பண்டார திஸாநாயக்க
இலங்கை

ஜெயலத் பண்டார திஸாநாயக்கவுக்கு பயணத்தடை.

நிதி மோசடி ஒன்றின் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெயலத் பண்டார...