24 6656b4127808c 1
இந்தியாசெய்திகள்

இந்தியாவுடனான லாகூர் பிரகடனம் தொடர்பில் பாகிஸ்தான் தகவல்

Share

இந்தியாவுடனான லாகூர் பிரகடனம் தொடர்பில் பாகிஸ்தான் தகவல்

இந்தியாவுடன் 1999ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட லாகூர் பிரகடனத்தை தமது நாடு மீறியதை பாகிஸ்தானிய (Pakistan) முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் (Nawaz Sharif) ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்த சமாதான ஒப்பந்தத்தில் செரீப்பும் அப்போதைய இந்திய பிரதமர் அடல் பிஹரிபாயும் ( Atal Bihari) கையெழுத்திட்டுள்ளதோடு முன்னாள் ஜனாதிபதி ஜெனரல் பெர்வேஸ் முசாரப்பால் ஆரம்பிக்கப்பட்ட கார்கில் மோதலுக்கு தமது தவறே காரணம் என்று அவர் மறைமுகமாக கூறியுள்ளார்.

1998ஆம் ஆண்டு மே 28ஆம் திகதியன்று, பாகிஸ்தான் ஐந்து அணு சோதனைகளை நடத்தியுள்ளது.இதைத் தொடர்ந்து, வாஜ்பாய் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ளார்.

இதன்போது இரண்டு தலைவர்களும் 1999 பெப்ரவரி 21ஆம் திகதி லாகூர் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த ஒப்பந்தம் அமைதியையும் பாதுகாப்பையும் பராமரிப்பதையும், மக்களிடமிருந்து தொடர்புகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

எனினும் பாக்கிஸ்தானியப் படைகள் ஜம்மு மற்றும் காஸ்மீரில் கார்கில் மாவட்டத்தில் ஊடுருவியதால், 1999 மார்ச்சில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் மோதல் ஆரம்பமானது.இதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இதேவேளை பாகிஸ்தான் நடத்திய முதல் அணுசக்தி சோதனையின் 26ஆவது ஆண்டு நிறைவைக் குறித்த கருத்துரைத்துள்ள நவாஸ் செரீப், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் அணுசக்தி சோதனைகளைத் தடுப்பதற்காக பாகிஸ்தானுக்கு 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்தார்.

எனினும் அதனை ஏற்றுக்கொள்ள தாம் மறுத்து விட்டதாகவும் நவாஸ் செரீப் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...