sky
செய்திகள்இலங்கை

வானில் இருந்து வந்த மர்மப்பொருள்! – இலங்கையில் பதிவான சம்பவம்

Share

இலங்கையின் சில பகுதிகளில் வானிலிருந்து மர்மப்பொருள் விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெஹிஅத்தகண்டிய, கிராதுருகோட்டை மற்றும் அம்பாறை பிரதேசங்களில் இவ்வாறு வானிலிருந்து மர்ம பொருள் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிலந்தி கூடுகள் போன்ற பொருள் ஒன்று நேற்று காலை வானில் பறந்தது வந்ததுடன், அவை தரையில் விழுந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அந்த பகுதி மக்கள் கருத்து வெளியிடுகையில்,

“தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது நூல் போன்ற ஒன்று வானில் இருந்து விழுந்தது. அவை பிரதேசம் முழுவதும் வெள்ளையாக படர்ந்து காணப்பட்டது.

எவ்வாறாயினும், சூரிய ஒளி பட்டவுடன் அவை மறைந்துவிடுகின்றது. நேரத்தில் விமானம் ஒன்று அந்த பகுதிகளில் பறந்ததனை அவதானித்தோம். அதில் புகை போன்று வெளியேறியது எனினும் சற்று நேரத்தில் விமானம் மறைந்து விட்டது.

இதனால் சந்தேகம் ஏற்பட்டு பொலிஸார் மற்றும் விமானப்படையினருக்கு தகவல் வழங்க நடவடிக்கை மேற்கொண்டோம் என தெரிவித்துள்ளனர்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...