24 6646b4e2adc80
இலங்கைசெய்திகள்

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அறிவிப்பு

Share

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையில் திருத்தங்களைச் செய்ய முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கடன் வழங்கிய நாடுகள், இலங்கை அரசாங்கம் என்பன சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2033 ஆம் ஆண்டு வரையில் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அவை தற்பொழுது பூர்த்தி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் திருப்திக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்சி இந்த உடன்படிக்கையை திருத்துவதாக கூறியுள்ளதாகவும், தேசிய மக்கள் சக்தி திருத்தம் செய்யப்போவதில்லை என கூறியுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FUK4fwSxpXY292Ae6yxC9
செய்திகள்உலகம்

மியன்மாரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: ஒரே நாளில் இருமுறை அதிர்ந்ததால் மக்கள் அச்சம்!

மியன்மாரில் இன்று மாலை அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இது அப்பகுதி மக்களிடையே பெரும்...

court
செய்திகள்இலங்கை

கத்தோலிக்க பாதிரியார் மீது தாக்குதல்: மோட்டார் சைக்கிள் அதிரடிப்படை அதிகாரிகள் 6 பேருக்கு விளக்கமறியல்!

கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கம்பஹா பிராந்திய குற்றத் தடுப்பு விசாரணை...

image 2f3d7cb265
செய்திகள்இலங்கைபிராந்தியம்

70 ரூபாய் குடிநீர் போத்தல் 100 ரூபாய்க்கு விற்பனை: கொழும்பு வர்த்தகருக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்!

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த கொழும்பிலுள்ள பிரபல வர்த்தக...

penguin viral video 1769232930
உலகம்செய்திகள்

தனிமைப் பயணம்: இணையத்தைக் கலக்கும் நிகிலிஸ்ட் பென்குயின்! தத்துவமா? அல்லது அறிவியலா?

தன் கூட்டத்தை விட்டுப் பிரிந்து, பனிபடர்ந்த மலைகளை நோக்கித் தனியாக நடந்து செல்லும் ஒரு சிறிய...