24 664559e641d7d
இலங்கைசெய்திகள்

ரஷ்ய – உக்ரைன் களமுனையில் பலியாகிய 16 இலங்கை இராணுவ வீரர்கள்

Share

ரஷ்ய – உக்ரைன் களமுனையில் பலியாகிய 16 இலங்கை இராணுவ வீரர்கள்

ரஷ்ய – உக்ரைன் போரின் போது 16 இலங்கை இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், ஓய்வுபெற்ற சிறிலங்கா இராணுவத்தினர் வெளியேறியமை தொடர்பில் 288 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரத்மித பண்டார தென்னகோன்(Pramitha Bandara Tennakoon) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் பாதுகாப்பு அமைச்சும் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ரஷ்ய போரில் ஈடுபட்டுவரும் ஓய்வு பெற்ற இலங்கை இராணுவ வீரர்கள் மீது அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்போது இராஜாங்க அமைச்சரால் மனித கடத்தலில் ஈடுபடுவோர் தொடர்பில் 0112-401146 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போருக்கான ஆட்சேர்ப்பு தொடர்பான விளம்பரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், போரின் முன் வரிசையில் இருந்த எமது நாட்டின் இராணுவ வீரர் ஒருவரை தன்னால் தொடர்பு கொள்ள முடிந்ததாகவும், ரஷ்ய மொழியில் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் சட்டப்பூர்வமானது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...