24 6644f5307e445
இந்தியாஇலங்கைஉலகம்செய்திகள்

இலங்கை பிரஜையின் தீவிரவாத தாக்குதல் வழக்கு: சுற்றிவளைத்த என்ஐஏ

Share

இலங்கை பிரஜையின் தீவிரவாத தாக்குதல் வழக்கு: சுற்றிவளைத்த என்ஐஏ

இலங்கை மற்றும் பாகிஸ்தான் பிரஜைகள் சம்பந்தப்பட்ட உளவு வழக்கில் 2023ஆம் ஆண்டு பிணை வழங்கப்பட்ட நிலையில், தலைமறைவான ஒருவரை, இந்திய தேசிய புலனாய்வு(NIA) அமைப்பு கைது செய்துள்ளது.

குறித்த கைதானது இன்று(15) இடம்பெற்றுள்ளது.

இந்த ஆண்டு மே 7ஆம் திகதி அவரை குற்றவாளியாக இந்நிய நீதிமன்றம் அறிவித்திருந்தது.

முன்னதாக டிரொரஃபி நூருதீன் என்ற இவரை கைது செய்ய உதவுவோருக்கு 5 இலட்சம் பணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள ராஜீவ் நகர் பகுதியில் இருந்து நூர்தீன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

இதன்போது கையடக்கத் தொலைபேசிகள் உட்பட்ட இலத்திரனியல் உபகரணங்கள் மீட்கப்பட்டதாக என்ஐஏ என்ற இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது.

இலங்கையின் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகத்தில் பணிபுரிந்த இலங்கை நாட்டவரான முகமது சாகிர் ஹ_சைன் மற்றும் பாகிஸ்தானிய நாட்டவர் அமீர் சுபைர் சித்திக் ஆகியோருடன் இணைந்து சந்தேகநபர், பயங்கரவாத சதி செய்தார் என்பதே நூர்தீன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டாகும்.

இவரை பயன்படுத்தி 2014ஆம் ஆண்டு சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் பெங்களூரில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன் குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான் நாட்டவரின் வழிகாட்டலில் போலியான இந்திய ரூபாய்கள் மூலம் தேச விரோத உளவு நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்வதில் நூருதீன் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...