24 6644f5307e445
இந்தியாஇலங்கைஉலகம்செய்திகள்

இலங்கை பிரஜையின் தீவிரவாத தாக்குதல் வழக்கு: சுற்றிவளைத்த என்ஐஏ

Share

இலங்கை பிரஜையின் தீவிரவாத தாக்குதல் வழக்கு: சுற்றிவளைத்த என்ஐஏ

இலங்கை மற்றும் பாகிஸ்தான் பிரஜைகள் சம்பந்தப்பட்ட உளவு வழக்கில் 2023ஆம் ஆண்டு பிணை வழங்கப்பட்ட நிலையில், தலைமறைவான ஒருவரை, இந்திய தேசிய புலனாய்வு(NIA) அமைப்பு கைது செய்துள்ளது.

குறித்த கைதானது இன்று(15) இடம்பெற்றுள்ளது.

இந்த ஆண்டு மே 7ஆம் திகதி அவரை குற்றவாளியாக இந்நிய நீதிமன்றம் அறிவித்திருந்தது.

முன்னதாக டிரொரஃபி நூருதீன் என்ற இவரை கைது செய்ய உதவுவோருக்கு 5 இலட்சம் பணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள ராஜீவ் நகர் பகுதியில் இருந்து நூர்தீன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

இதன்போது கையடக்கத் தொலைபேசிகள் உட்பட்ட இலத்திரனியல் உபகரணங்கள் மீட்கப்பட்டதாக என்ஐஏ என்ற இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது.

இலங்கையின் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகத்தில் பணிபுரிந்த இலங்கை நாட்டவரான முகமது சாகிர் ஹ_சைன் மற்றும் பாகிஸ்தானிய நாட்டவர் அமீர் சுபைர் சித்திக் ஆகியோருடன் இணைந்து சந்தேகநபர், பயங்கரவாத சதி செய்தார் என்பதே நூர்தீன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டாகும்.

இவரை பயன்படுத்தி 2014ஆம் ஆண்டு சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் பெங்களூரில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன் குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான் நாட்டவரின் வழிகாட்டலில் போலியான இந்திய ரூபாய்கள் மூலம் தேச விரோத உளவு நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்வதில் நூருதீன் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
ahr0chm6ly9jyxnzzxr0zs5zcghkawdp 4
உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன்...

coverimage 01 1512114047 1546165239 1562741874
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று 6% அதிகரிப்பு:உயிரிழப்புகள் 30 ஆகப் பதிவு!

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில்...

images 5 5
உலகம்செய்திகள்

இந்தியா-ரஷ்யா இராணுவ ஒப்பந்தம்: ‘தளவாட ஆதரவு பரஸ்பரப் பரிமாற்ற’ சட்டத்துக்குப் புட்டின் ஒப்புதல்!

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ‘Reciprocal Exchange of Logistics Support’ (தளவாட ஆதரவின் பரஸ்பரப்...

articles2FvNVHzqk0rGKKgejyoUzJ
இலங்கைசெய்திகள்

கல்வி ஒத்துழைப்பு வலுப்படுத்தல்: வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த...