24 663d785e22914
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையில் நடந்த பயங்கரம்

Share

தென்னிலங்கையில் நடந்த பயங்கரம்

காலியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட நபரின் சகோதரரும் படுகாயமடைந்துள்ளதாக காலி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளார்.

அக்மீமன, குருந்தகந்த, தோட்டகொட பகுதியைச் சேர்ந்த ஹிக்கடுவ கோரலகேயைச் சேர்ந்த பிரசன்ன குமார என்ற 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது வாளால் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், கொலையின் பின்னர் உயிரிழந்தவரின் மூத்த சகோதரனையும் கொலை செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அவர் பலத்த காயமடைந்த நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்களை கைது செய்வதற்காக காலி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கமைய அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...