சேதன பசளை உற்பத்தி
இலங்கைசெய்திகள்

சேதனப்பசளை உற்பத்தி – விவசாயிகளுக்கு நிதி

Share

நாட்டில் சேதனப்பசளை உற்பத்திக்காக இதுவரை 4 லட்சத்து 81 ஆயிரம் விவசாயிகளுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது என விவசாய இராஜாங்க அமைச்சர் அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கால நிலை மாற்றத்துக்காக தீர்வு மற்றும் பசுமை பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் இராஜாங்க அமைச்சு உபகுழுவின் மீளாய்வுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், உர உற்பத்திக்காக விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்ற 12,500 ரூபா கொடுப்பனவுவில் 7500 ரூபா தற்போது வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் மட்டும் விவசாயிகளுக்கு 1000 மில்லியன் ரூபாவுக்கு அதிக தொகை நிதி வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பெரும்போகத்தில் விவசாயிகளுக்கு தேவையான சேதனப்பசளையை தட்டுப்பாடு இன்றி வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய களைநாசினிகளின் தட்டுப்பாடு தொடர்பில் விவசாய அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர இதன்போது தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...