24 663be034b259c
உலகம்செய்திகள்

சிறுவர்களை துரத்தி,துரத்தி நாய்கள் கடிப்பது ஏன்..!

Share

சிறுவர்களை துரத்தி,துரத்தி நாய்கள் கடிப்பது ஏன்..!

நாய்கள்(dogs) பெரியவர்களை விடவும் சிறுவர்களையே பெரும்பாலும் துரத்தி துரத்தி கடிப்பதுண்டு. இவ்வாறு நாய்கள் சிறுவர்களை(children) ஏன் குறிவைத்து தாக்குகின்றன என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரபல கால்நடை மருத்துவர் பற்றிக் ஜோஷ்வா தெரிவிக்கையில்,

“நாய்களின் பெரும்பாலான இலக்காக இருப்பது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தான். ஏனென்றால், அந்த வயதில் உள்ள குழந்தைகளின் செயற்பாடுகள் அப்படி இருக்கும்.

குழந்தைகள் பொதுவாக ஒரு இடத்தில் இருக்க மாட்டார்கள். திடீர் திடீரன ஓடுவார்கள். கை கால்களை அசைப்பார்கள். பயப்படுவார்கள். இவை அனைத்துமே நாய்களுக்கு பிறவிலேயே பிடிக்காத செயல்பாடுகள்.அதனால், நாய்களுக்கு குழந்தைகள் மீது சட்டென பார்வை திரும்புகிறது.

அதேபோல, குழந்தைகள் நாய்களுக்கு இணையான உயரத்தில் இருப்பார்கள். அப்படி இருக்கும் போது, நாய்களின் கண்களை சரிக்கு சமமாக பார்ப்பார்கள். நாய்களின் கண்களை உற்று பார்த்தால் அவற்றுக்கு பிடிக்காது.

அப்படி பார்ப்பது, ஏற்கனவே கோபத்தில் உள்ள நாய்களுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தும். அதனால்தான் குழந்தைகளை நாய்கள் அதிக அளவில் தாக்குகின்றன” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...