24 663c15b3c4426
இலங்கைசெய்திகள்

நடைமுறைக்கு வரவுள்ள புதிய சட்டம்! ஜனாதிபதி அறிவிப்பு

Share

நடைமுறைக்கு வரவுள்ள புதிய சட்டம்! ஜனாதிபதி அறிவிப்பு

தற்போது நாட்டில் அனைவரும் வெப்பமான காலநிலையை எதிர்கொண்டுள்ள நிலையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான புதிய சட்டத்தை அரசாங்கம் உருவாக்கி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) அறிவித்துள்ளார்.

நமது தேசத்திற்கும் கிரகத்திற்கும் காலநிலை நடவடிக்கை என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி தெரிவித்துள்ளதாவது ” சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான புதிய சட்டத்தையும் நாங்கள் உருவாக்கி வருகிறோம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் இரண்டையும் கையாளும் ஒரு சட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளோம்.

இது மத்திய சுற்றாடல் அதிகார சபையை தொடர்ந்து இயக்கும் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மையத்தையும் உள்ளடக்கும். இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன.

நமது சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரத்திற்கான கிடைக்கும் திறன் ஆகியவற்றை பார்த்தால், நமக்கு 30 முதல் 50 ஜிகாவாட் வரையிலான ஆற்றல் உள்ளது.

எங்களிடம் உள்ள இந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை நாங்கள் அதிகம் பயன்படுத்த விரும்புகிறோம்.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதே ஜனாதிபதியான எனது பணியாக இருந்தது. இதுவரை இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதால் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

நாட்டின் தற்போதைய பொருளாதார அமைப்பில் நாம் தொடர்ந்து முன்னேற முடியாது. நான் முன்பு பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டது போல், நாம் அதிக போட்டித்தன்மை கொண்ட ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக மாற வேண்டும். அதற்கான புதிய சட்டத்தையும் உருவாக்கி இருக்கிறோம்.

பொருளாதார மாற்று சட்டம் அடுத்த வாரம் வர்த்தமானியில் வெளியிடவுள்ளோம்.

நாங்கள் எங்களின் கடனை வெற்றிகரமாக மறுசீரமைத்துள்ளோம். மிகவும் சிரமப்பட்டு அந்த வேலையை செய்தோம். அந்த சவாலை எதிர்கொள்ளும் திறன் இலங்கைக்கு இருந்தது.

ஆனால் அதற்கு ஆதரவு தேவைப்படுபவர்களும் இருக்கிறார்கள். மேலும் கடன் மறுசீரமைப்புக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனைவரும் உதவ வேண்டும்.

கடன் நெருக்கடியில் இருந்து மீள ஆப்பிரிக்க நாடுகளுக்கு நிதி தேவைப்படுகிறது. இல்லையேல் அந்த கண்டத்தில் அழிவு ஏற்படும்.” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Ranil UNP
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிகொத்தவில் டிஜிட்டல் புரட்சி: ஸ்டார்லிங்க் வசதி மற்றும் UNP செயலியுடன் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு...

Weather Forecast Oct 11 2025
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மழை: சில இடங்களில் 50 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடிய வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது....

NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர்...

PSX 20260202 191816
செய்திகள்அரசியல்இலங்கை

எனக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் தொடர்பில்லை! – CID விசாரணையில் பிரசன்ன ரணதுங்க விளக்கம்.

திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தியதாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...