24 66353afe5f28c
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாசகார செயல்

Share

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாசகார செயல்

தேசிய வீசா கொள்கையை தயாரிப்பது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குழுவொன்றை நியமித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நேற்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வருகைதந்த வீசா வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் நாசகார செயலாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக அவர் இன்று ஊடகங்களிடம் கருத்துரைத்துள்ளார்

இதன்போது இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் வீசா வழங்கும் செயற்பாடுகள் ஒப்படைக்கப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க தவறியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

உலகளாவிய ரீதியில் செயற்படுவதால் ‘VFS Global’ நிறுவனமானது அதிகளவிலான இடத்தைப் பெற்றுள்ளதாகவும், சுற்றுலா ஊக்குவிப்புச் சேவைகளுக்காக, குறித்த நிறுவனத்தின் ஆதரவைப் பெற முடியும் எனவும் குறிப்பிட்டார்.

இலங்கைக்கான வீசா கட்டணம் குறைக்கப்படுமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சுற்றுலாத்துறை அமைச்சர், தேசிய வீசா கொள்கையை தயாரிப்பது தொடர்பில் ஜனாதிபதி நியமிக்கும் குழுவின் ஊடாக, அது தீர்மானிக்கப்படும் என சுட்டிக்காட்டினார்.

எனினும் தம்மை பொறுத்தவரை 67 நாடுகளுக்கு இலவச வீசா வழங்குவதற்கே முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...