24 6635888ab8495
இலங்கைசெய்திகள்

மரக்கறிகளின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

Share

மரக்கறிகளின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

இந்த வருட இறுதி வரை மரக்கறிகளின் விலைகள் உயரும் சாத்தியம் இல்லை என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (Hector Kobbekaduwa Agrarian Research and Training Institute) தெரிவித்துள்ளது.

மரக்கறிகள் மற்றும் பழங்கள் மற்றும் ஏனைய உணவுப் பயிர்களின் விலை நிலைகள் தொடர்பில் ஏற்படக்கூடிய சாத்தியமுள்ள சூழ்நிலைகள் தொடர்பான ஆய்வு அறிக்கையை விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிக்கும் போதே அந்த நிறுவனம் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளது.

மே மற்றும் ஜூன் மாதங்களின் கடைசி இரண்டு வாரங்களில் கடும் மழை பெய்தால், ஜூன் மாதம் வரை மரக்கறிகளின் விலையில் சில அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

இருப்பினும் இந்த வருட இறுதி வரை மரக்கறிகளின் விலைகளில் பெரியளவில் மாற்றம் ஏற்படாது எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், எதிர்காலத்தில் அரிசியின் விலை அதிகரிக்கக் கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதன்படி கீரி சம்பா மற்றும் சம்பா போன்றவற்றின் விலை அதிகரிக்கக் கூடும் என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...

tax us
இலங்கை

அமெரிக்கா வழங்க போகும் வரப்பிரசாதம்.

அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மகிந்த சமரசிங்க இலங்கையின் ஏற்றுமதிகளுக்கான அமெரிக்காவின் வரிச்சலுகைகள் தொடர்பாக எதிர்காலத்தில் அமெரிக்காவிடமிருந்து...

Expired Medical
இலங்கை

பிரபல தனியார் மருந்தகங்களில் இடம்பெற்ற மோசடிகள் அம்பலம்.

நாடளாவிய ரீதியிலுள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆய்வகங்களில் பெருமளவிலான காலாவதியான மற்றும் தரமற்ற மருத்துவ...

arested 2
இலங்கை

காணித்தகராறால் பறிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் உயிர்.

காணித் தகராறு காரணமாக, அனுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள...