24 66306a0f2d765
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதிக்கான அனுமதி! சபாநாயகர் உறுதிப்படுத்தியுள்ள விடயம்

Share

வாகன இறக்குமதிக்கான அனுமதி! சபாநாயகர் உறுதிப்படுத்தியுள்ள விடயம்

வாகன இறக்குமதிக்கான அனுமதி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன(Mahinda Yapa Abeywardena) தெரிவித்துள்ளார்.

வரியில்லா வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குமாறு பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தநிலையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து தமது கோரிக்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்(Ranil Wickremesinghe) உத்தியோகபூர்வமாக முன்வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு தசாப்த காலமாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே பல அமைச்சர்கள் தொடர்ந்தும் 12 வருடங்களுக்கு மேற்பட்ட வாகனங்களையே பயன்படுத்தி வருவதாக சபாநாயகர் முன்னதாக குறிப்பிட்டிருந்ததாக ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...