24 662c4d1558182
இலங்கைசெய்திகள்

இணைய பரிவர்த்தனையில் பெரும் மோசடி

Share

நடப்பு வங்கி கணக்குகள் மற்றும் சேமிப்புக் கணக்குகள் மூலம் இணையத்தில் பண பரிவர்த்தனை செய்பவர்களின் கணக்குகளில் இருந்து பணம் எடுக்கும் மோசடியானது சுமார் ஒரு வார காலமாக இயங்கி வருவதாக பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற (26) நாடாளுமன்ற அமரிவில் கலந்துக்கொண்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இணைய பண பரிவர்த்தனை மோசடி மூலம் கணக்கு வைத்திருப்பவர்களுக்குத் தெரியாமல் வேறு கணக்குகளுக்கு பணம் மாற்றப்படுகின்றது. பணத்தைப் பெறுவதற்கான சிறிய தொகையைக் கூட பெறாத வகையில் இந்த மோசடி செய்யப்படுகின்றது.

பலாங்கொடையில் ஒருவரின் கணக்கிலிருந்து பதினோரு இலட்சம் வேறு கணக்கிற்கு மாற்றப்பட்டமை தொடர்பில் நேற்று 25 ஆம் திகதி கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் அவர் வங்கிக்குச் சென்று சோதனையிட்டபோது, ​​இணையவழியில் அமைப்பொன்றினால் பணம் களவாடப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு இடங்களில் இணைய பண பரிவர்த்தனைகள் மூலம் மோசடி இடம்பெறுகின்றது.

ஒரே நாளில் சுமார் ஐம்பது, அறுபது கணக்குகளுக்கு பணப் பரிமாற்றம் செய்து பெரும் மோசடி நடப்பதாகவும் இரண்டு மூன்று நாட்களில் சுமார் ஆயிரம் பேரின் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

எனவே இவ்வாறான மோசடி தொடர்பில் மத்திய வங்கிக்கும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிற்கும் அறிவிக்குமாறு நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
Government Unveils Plans to Boost Domestic Aviation in Support of Tourism
இலங்கைசெய்திகள்

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க உள்நாட்டு விமான சேவைகள் விரிவாக்கம்: அமைச்சர் அனுர கருணாதிலக்க உறுதி!

இலங்கையின் சுற்றுலாத்துறையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், உள்நாட்டு வானூர்தி போக்குவரத்து வலையமைப்பை வலுப்படுத்துவதற்கான புதிய...

94745991
செய்திகள்உலகம்

சிரியாவில் அமெரிக்காவின் ஆபரேஷன் ஹாக்ஐ ஸ்ட்ரைக்: ஐஎஸ் இலக்குகள் மீது மீண்டும் வான்வழித் தாக்குதல்!

சிரியாவில் நிலைகொண்டுள்ள ஐஎஸ் (IS) பயங்கரவாத அமைப்பினரை இலக்கு வைத்து, அமெரிக்கப் படைகள் மற்றும் அதன்...

default
உலகம்செய்திகள்

ஈரானில் 14-வது நாளாகத் தொடரும் போராட்டம்: 116 பேர் உயிரிழப்பு; போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை எச்சரிக்கை!

ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராகத் தொடங்கிய மக்கள் போராட்டம்,...

1185212 anbu
செய்திகள்இலங்கை

யாருடன் கூட்டணி? – ராமதாஸ் இன்று சென்னை வருகை; நாளை வெளியாகிறது அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) கூட்டணி நிலைப்பாடு...